மேயர் தனது மக்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வருவதற்காக பாரம்பரிய சடங்குகளுடன் Alicia Adriana என்ற ஒரு பெண் முதலையைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
மெக்சிகோவின் டெஹுவான்டெபெக் இஸ்த்மஸில் உள்ள சோண்டல் பழங்குடி மக்களின் நகரமான சான் பெட்ரோ ஹுவாமெலுலாவின் மேயர் விக்டர் ஹ்யூகோ சோசா. இவர் அலிசியா அட்ரியானா என்ற முதலையை திருமணம் செய்துகொள்ள பழங்குடி பாராம்பரிய முறையில் சடங்குகள் நடைபெற்றன.
கெய்மன் வகையைச் சேர்ந்த இந்த முதல் மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த சதுப்பு நிலத்தில் வாழ்கின்றன.நாங்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறோம்.
காதல் இல்லாமல் திருமணம் செய்து கொள்ள முடியாது. இளவரசியை திருமணம் செய்துகொள்கிறேன்” என்று சோசா கூறினார்.
இரண்டு பழங்குடியினக் குழுக்கள் ஒரு திருமணத்துடன் சமாதானத்திற்கு வருவதைக் குறைக்கும் வகையில் 230 ஆண்டுகளாக இந்தச் சடங்குகள் அப்பகுதியில் நடந்து வருகின்றன.ஒரு சோண்டல் மன்னர், ஹுவேவ் பழங்குடியினக் குழுவின் இளவரசியை மணந்தபோது இரண்டு பழங்குடி சமூகங்களுக்கும் இடையேயான விரோதம் முடிவுக்கு வந்தது என்று சொல்லப்படுகிறது. கடலோர ஓக்ஸாகா மாநிலத்தில் ஹுவே சமூக மக்கள் வாழ்கின்றனர்.
இந்தத் திருமணம் மழை பொழிவையும் அதிக விளைச்சலையும் கொடுக்கும் என்றும் சோண்டல் மக்களிடையே அமைதியும் நல்லிணக்கம் நிலவும் என்றும் வரலாற்றாசிரியர் ஜெய்ம் ஜராத்தே விளக்குகிறார்.
இநத் திருமண விழாவிற்கு முன், மணம் செய்துகொள்ளப்படும் பெண் முதலை வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, இதனால் மக்கள் அதை தங்கள் கைகளில் எடுத்து நடனமாடுவார்கள்.
முதலை பச்சை நிற பாவாடை, வண்ணமயமான எம்ப்ராய்டரி டூனிக் மற்றும் ரிப்பன்கள் அணிவித்து அலங்கரிக்கப்பட்டிருந்தது