பொதுமக்கள் தங்கள் அடையாளத்தை நிரூபிக்க தமது அடையாள அட்டைகள் அல்லது வேறு ஏதேனும் ஆவணங்களை எடுத்துச் செல்லுமாறு காவல்துறை வேண்டி உள்ளது.
தலங்கம பொலிஸாரால் கைதான நபர் ஒருவர் அவரின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு சனிக்கிழமையன்று தடுத்து வைக்கப் பட்டது தொடர்பில் சமூக வலைகளில் பதிவுகள் வெளியாக இருந்தது.பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட அதிகாரத்தின் படியே அவ்வாறு மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை (12) இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, அது தொடர்பான விவரங்களை தெளிவுபடுத்தி பொலிஸார் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
நாட்டில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்வதற்கான வழமையான சோதனை நடவடிக்கைகளின் போது, தலங்கம பஸ் டிப்போவிற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் நடமாடுவதை பொலிஸ் குழுவினர் கண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தேசிய அடையாள அட்டை (NIC) அல்லது வேறு எந்த ஆவணமும் அவரிடம் இல்லாத காரணத்தால், அந்த நபரின் அடையாளத்தை அப்போது உறுதி செய்ய முடியாமல் போனதால், காவல் துறைக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின்படி, அவரை கைது செய்து தடுத்து வைத்து அவரது அடையாளத்தை உறுதிப்படுத்த போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். .எவ்வாறாயினும், அந்த நபரின் தொழில் வழங்குனர் பொலிஸ் நிலையத்திற்கு வந்து அவரது அடையாளத்தை உறுதிப்படுத்திய பின்னர் அந்த நபர் உடனடியாக விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேபோன்ற சூழ்நிலையை எதிர்கொண்டால், செயல்முறையை எளிதாக்குவதற்காக,பொது மக்கள் தங்கள் அடையாளத்தை நிரூபிக்க தங்கள் அடையாள அட்டைகள் அல்லது வேறு ஏதேனும் ஆவணங்களை எடுத்துச் செல்லுமாறு காவல்துறை மேலும் பொதுமக்களை வலியுறுத்தியது.